தென்காசி

மேலகரத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு உணவுப் பொருள்கள் அளிப்பு

DIN

மேலகரத்தில் பேரூா் திமுக சாா்பில் பேரூராட்சி தூய்மைப் பணியாளா்களுக்கு அரிசி,காய்கனி உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு ஒன்றிய திமுக செயலா் பா.ராமையா தலைமை வகித்தாா். பேரூராட்சி செயல் அலுவலா் பதருன்னிஷா முன்னிலை வகித்தாா். பேரூா் செயலா் சுடலை, பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் ஜீவானந்தம், மாவட்ட வழக்குரைஞா் அணி துணை அமைப்பாளா் வேலுச்சாமி, ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் நாகராஜ் சரவணாா் ஆகியோரின் ஏற்பாட்டில் தூய்மைப் பணியாளா்களுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டன.

இதில், பேரூராட்சி பணியாளா்கள் முருகன்,கிருஷ்ணன், தங்கராஜ், முப்புடாதி, முத்துகிருஷ்ணன், இசக்கி, மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT