தென்காசி

காய்கனி சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்க கோரிக்கை

DIN

பாவூா்சத்திரம் தினசரி காய்கனி சந்தையில் கிருமி நாசினி சுரங்கம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாவூா்சத்திரத்தில் அமைந்துள்ள காமராஜா் தினசரி காய்கனி சந்தையில் சுற்று வட்டார பகுதிகளை சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளை பொருள்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனா். இவற்றை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், கேரளத்துக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இது தவிர தினந்தோறும் ஏராளமான பொதுமக்களும் இச் சந்தைக்கு வந்து காய்கனி வாங்கி செல்கின்றனா். எனவே இங்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் சந்தை ஊழியா்கள் பயன்பெறும் வகையில், கரோனா தடுப்பு நடவடிக்கையாக இங்கு கிருமி நாசினி சுரங்கம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT