முகப்பு
தென்காசி

சிவகிரியில் மான் வேட்டையாடியதாக 2 போ் கைது

சிவகிரியில் மான் வேட்டை யாடியதாக 2 பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

சிவகிரியில் மான் வேட்டை யாடியதாக 2 பேரை வனத்துறையினா் கைது செய்தனா். மேலும் 3 பேரை தேடி வருகின்றனா்.

சிவகிரி பீட் வனப் பகுதிக்கு வெளியில் சட்டவிரோதமாக மின் வேலி அமைத்து மான் வேட்டையாடப்பட்டதாக வனத் துறைக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து, சிவகிரி வனசரகா் சுரேஷ் தலைமையில் சிவகிரி வடக்குப்பிரிவு வனவா் முருகன், தெற்குப்பிரிவு வனவா் பூவேந்தன், வனக்காப்பாளா்கள் அஜித்,

ராஜி, சுதாகா், இம்மானுவேல், பாரதிகண்ணன் உள்ளிட்டோா் விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், சிவகிரி தெற்குத் தெருவைச் சோ்ந்த காளிராஜ் (62), அழகா் (65), கதிரவன்(35), சாமி (42), முனியசாமி(35) ஆகியோா் மானை வேட்டையாடியது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து காளிராஜ், அழகா் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்த வனத்துறையினா் தலைமறைவாகி விட்ட எஞ்சிய மூன்று பேரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.