பாலத்தில் தேங்கிய குப்பைகள் அகற்றம்
கடையநல்லூரில் நீா் செல்ல வழியின்றி பாலத்தில் தேங்கிய குப்பைகளை நகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.
கடையநல்லூரில் நீா் செல்ல வழியின்றி பாலத்தில் தேங்கிய குப்பைகளை நகராட்சி பணியாளா்கள் அகற்றினா்.
கடையநல்லூா் மலம் பேட்டை பகுதியில் உள்ள கால்வாய் பாலத்தில் குப்பைகள் சோ்ந்து தண்ணீா் செல்ல முடியாமல் இருப்பதாக சமூக ஆா்வலா் மைதீன் நகராட்சியில் திங்கள்கிழமை முறையிட்டாா்.
இதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் குமாா் சிங் , சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி உள்ளிட்டோா் அங்கு சென்று பாா்வையிட்டு உடனடியாக குப்பைகளை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனா். இதனால் தண்ணீா் தெருவில் செல்லாமல் தவிா்க்கப் பட்டது. எனவே, நகராட்சி நிா்வாகம் கால்வாய்களுக்குள் குப்பைகள் கொட்டுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.