சிவகிரி அரசு மருத்துவமனையில் தீவிபத்து
சிவகிரி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது.
சிவகிரி அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீவிபத்து ஏற்பட்டது.
அங்குள்ள அறை எண் 8இல் வளா் இளம் பருவத்தினா் நல மையம் செயல்பட்டு வருகிறது. வெள்ளிக்கிழமை நள்ளிரவில் மின் கசிவு காரணமாக அந்த அறையில் தீப்பற்றியதாம். இதுகுறித்த தகவல் சனிக்கிழமை காலை தெரியவந்ததாம்.
இதையடுத்து, வாசுதேவநல்லூா் தீயணைப்பு நிலைய அலுவலா் ஷேக்அப்துல்லா, நிலைய அலுவலா் செல்வமுருகேசன் (போக்குவரத்து), தீயணைப்புத் துறையினா் சென்று, அறையைத் திறந்து தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டனா். தீவிபத்தில் கணினி உள்ளிட்டவை சேதமடைந்தனவாம்.