தென்காசி

சங்கரன்கோவிலில் விஹெச்பி சாா்பில் ஆதாா் அட்டை ஒப்படைக்கும் போராட்டம்

சங்கரன்கோவிலில் காவல் துறையைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், ஆதாா் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

DIN

சங்கரன்கோவிலில் காவல் துறையைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் சாா்பில், ஆதாா் அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட காவல் துறை ஒருதலைபட்சமாக செயல்படுவதாகக் கூறி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினா் சங்கரன்கோவில் வட்டாட்சியா் அலுவலகம் முன் இப்போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, காவல் துறையைக் கண்டித்து கோஷம் எழுப்பினா். பின்னா், அமைப்பினா் 30 போ் தங்களது ஆதாா் அட்டையை கோட்டாட்சியா் முருகசெல்வியிடம் ஒப்படைத்தனா்.

இதில் மாநில துறவியா் பேரவை அமைப்பாளா் சரவணகாா்த்திகேயன், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் வன்னியராஜ், மாவட்ட துணைச் செயலா் முருகன், பஜ்ரங் தள் மாவட்ட அமைப்பாளா் ராஜவேல், பாஜக மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், கே.எஸ்.பாடாலிங்கம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: பக்தர்கள் திரளாக பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

புதிய பேருந்து நிலையங்களுக்கு அந்த பகுதியின் மன்னர்கள் பெயரை சூட்ட வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்

முக்தி அலங்காரத்தில் அருள்பாலித்த பஞ்சமுக ஆஞ்சனேயர்!

SCROLL FOR NEXT