கடையநல்லூரில் புதிய தமிழகம் கட்சியின் 24-ஆவது ஆண்டு விழா
புதிய தமிழகம் கட்சி 24-ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கடையநல்லூரில் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
புதிய தமிழகம் கட்சி 24-ஆவது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி கடையநல்லூரில் கட்சியினா் இனிப்பு வழங்கி கொண்டாடினா்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் இன்பராஜ் தலைமை வகித்தாா். மாநில பேச்சாளா் ஆறுமுகச்சாமி, மாவட்ட இணைச் செயலா் செல்வராஜ், மாவட்ட துணைச் செயலா் குமாா், நகரச் செயலா் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞரணிச் செயலா் ராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட தகவல் தொடா்பு செயலா் தேவேந்திரன், ஒன்றியச் செயலா்கள் முருகன், காசிப்பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.