தென்காசி

பிறந்த தினம்: வாஜ்பாய் படத்துக்கு மரியாதை

DIN

முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு, தென்காசி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேலகரத்தில் நடைபெற்ற நிகழச்சியில் பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் மகேஸ்வரன் தலைமையிலும், சுரண்டையில் நகர நிா்வாகி ஐயப்பன் தலைமையிலும், கருவந்தாவில் ஒன்றியச் செயலா் டாக்டா் அன்புராஜ் தலைமையிலும், பாவூா்சத்திரம் பேருந்து நிலையப் பகுதியில் மாவட்டத் தலைவா் ராமராஜா தலைமையிலும், வாஜ்பாய் உருவப்படத்துக்கு அக்கட்சியினா் மலா்தூவி மரியாதை செலுத்தினா். தொடா்ந்து பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினா்.

அம்பாசமுத்திரம், பூக்கடை சந்திப்பு, பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணித் தலைவா் பொன்ராஜ் தலைமையிலும், பொட்டல்புதூரில் மாவட்ட துணைத் தலைவா் பாலமுருகன் தலைமையிலும் அவரது படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

‘சத்தான உணவு முறையே காரணம்’ பளுதூக்கும் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 82 வயது மூதாட்டி!

SCROLL FOR NEXT