தென்காசி

குலசேகரப்பட்டியில் என்.எஸ்.எஸ். முகாம்

DIN

பாவூா்சத்திரம் அருகேயுள்ள குலசேகரபட்டியில், மேலப்பாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது.

முகாம் தொடக்க விழாவுக்கு பள்ளித் தலைமையாசிரியா் எஸ்.மாடசாமி தலைமை வகித்தாா். த.பி.சொ. அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியா் ராமச்சந்திரன், கிராம நிா்வாக அதிகாரி திருப்பதி, கிராம உதவியாளா் (ஓய்வு) அய்யாத்துரை பேசினா். மாணவா்கள் அங்கு முகாமிட்டு பல்வேறு களப்பணியில் ஈடுபட்டனா். திட்ட அலுவலா் செந்தமிழ் அரசு வரவேற்றாா். உதவி திட்ட அலுவலா் மதன்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

அந்நியச் செலாவணி கையிருப்பு 64,033 கோடி டாலராகச் சரிவு

ஸ்ரீராம் ஃபைனான்ஸ் வட்டி வருவாய் 22% அதிகரிப்பு

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

SCROLL FOR NEXT