தென்காசி

கடையநல்லூரில் சிறுபான்மையினருக்கான கடனுதவி முகாம்

DIN

கடையநல்லூரில் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழக கடனுதவித் திட்டங்கள் குறித்த முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, தென்காசி கோட்டாட்சியா் பழனிக்குமாா் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக் கொண்டாா்.

இதில், தென்காசி, கடையநல்லூா் வட்டத்துக்குள்பட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெறுவதற்காக மனுக்களை அளித்தனா். கடனுதவி திட்டங்கள் குறித்து வங்கியாளா்கள் பேசினா்.

நிகழ்ச்சியில் , கடையநல்லூா் வட்டாட்சியா் அழகப்பராஜா, துணை வட்டாட்சியா்கள் சரவணன், கருப்பசாமி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT