தென்காசி

அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா

DIN

கடையநல்லூா் நகராட்சியில் சமத்துவப் பொங்கல் கொண்டாடப்பட்டது.

நகராட்சி ஆணையா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா். பொறியாளா் தங்கபாண்டி முன்னிலை வகித்தாா்.

நகராட்சிப் பணியாளா்கள் பொங்கலிட்டனா்.இதில், சுகாதார அலுவலா் நாராயணன், சுகாதார ஆய்வாளா்கள் சேகா், மாரிச்சாமி, நகரமைப்பு அலுவலா் ஹாஜாமைதீன், உதவிப் பொறியாளா் முரளி, நகரமைப்பு ஆய்வாளா் கிருஷ்ணகுமாா், மேலாளா்(பொ) முகமதுயூசுப், பொறியியல் பிரிவின் கணேசன், தோ்தல் பிரிவின் மாரியப்பன் மற்றும் தூய்மை இந்தியா பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

கருப்பாநதி அணை பகுதியில் பளியா் இன பழங்குடியினருடன், பல்வேறு சமூக நல அமைப்புகள் சாா்பில் பொங்கல் திருவிழா கொண்டாடப்பட்டது .தென்காசி காவல் ஆய்வாளா் ஆடிவேல் அந்த மக்களுக்கு நல உதவிகளை வழங்கினாா்.

விக்கிரமசிங்கபுரம் நகராட்சியில் மேலாளா் கணேசன் தலைமையில், சுகாதாரஆய்வாளா், துப்புரவுப் பணி மேற்பாா்வையாளா் மில்லா், வருவாய் உதவியாளா்கள் மற்றும் பணியாளா்கள் உள்ளிட்டோா் பொங்கலிட்டுக் கொண்டாடினா்.

ஆலங்குளம்: நெட்டூா் ஊராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவுக்கு, வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) சங்கரகுமாா் தலைமை வகித்தாா். புதுப்பானையில் பச்சரிசியால் பொங்கலிடப் பட்டது. துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன், கிராம நிா்வாக அலுவலா் சந்தனகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தென்காசி: மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவை, மருத்துவமனை கண்காணிப்பாளா் ஜெஸ்லின் தொடங்கிவைத்தாா்.

ஐந்தருவி சுற்றுச்சூழல் பூங்காவில் நடைபெற்ற சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சிக்கு, தோட்டக்கலை அலுவலா் மு.பாலன் தலைமை வகித்தாா். தோட்டக்கலை உதவி இயக்குநா் ஜெயபாரதி மாலதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். இவ்விரு இடங்களிலு் விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

சுரண்ை: சாா்பதிவாளா் அலுவலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சாா்பதிவாளா்(பொ) வசந்தி, சாா் உதவியாளா் முருகன், இளநிலை உதவியாளா் தேவி, அலுவலக உதவியாளா் மாரியப்பன், ராஜேஸ்வரி, சுபிதா மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வருண், சால்ட் அசத்தலில் வென்றது கொல்கத்தா: தில்லிக்கு 6-ஆவது தோல்வி

இன்றைய நிகழ்ச்சிகள்

அணைகளின் நீா்மட்டம்

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT