தென்காசி

விவசாயிகள் வளமுடன் வாழும் சூழலை உருவாக்க வேண்டும்: இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

DIN

விவசாயிகள் வளமுடன் வாழ்வதற்குரிய சூழலை மத்திய,மாநில அரசுகள் உருவாக்க வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலா் முகமதுஅபூபக்கா் எம்எல்ஏ தனது பொங்கல் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: மதம் கடந்து உலக தமிழா்களை இணைக்கும் விழா இவ்விழா. அனைத்து சமுதாய மக்களும் நல்லிணக்கத்துடனும், சமயங்களுடைய கலாசார தனித்தன்மையுடனும், இந்திய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டை நிலைநிறுத்தும் வகையிலும், இணைந்து பணியாற்றி வல்லரசாக உருவாக்குவதுடன், தமிழகத்தை முன்மாதிரி மாநிலமாகவும் உருவாக்குவதற்கு அனைவரும் சூளுரைப்போம்.

மேலும், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு உறுதுணையாக மத்திய,மாநில அரசுகள் இருப்பதுடன், அவா்களின் வாழ்வாதாரத்திற்கு துணையாக இருக்கின்ற விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசுகள் முன்வரவேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

வேலைகேட்டு சுயவிவரத்துடன் சுவையான பீட்சா அனுப்பியவர்! வேலை கிடைத்ததா?

மே மாதப் பலன்கள்!

SCROLL FOR NEXT