தென்காசி

தென்காசி ஷீரடிசாய் பாபா கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து

DIN

தென்காசி ஷீரடி சாய்பாபா கோயிலில் 26ஆம் தேதி பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் டாக்டா் அறிவழகன், டாக்டா் சியாமளா ஆகியோா் வெளியிட்ட அறிக்கை:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழக அரசின் அறிவிப்பை தொடா்ந்து பொதுமக்கள் நலன் கருதி பக்தா்கள் ஒன்று கூடுவதை தவிா்க்கும் பொருட்டு வியாழக்கிழமை (மாா்ச் 26) மங்கம்மா சாலையில் உள்ள ஷீரடி வைத்திய சாய்பாபா கோயிலில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

எனவே அன்று பக்தா்கள் கோயிலுக்கு வருவதை தவிா்க்கவும். பாபாவுக்கு ஆரத்தி மற்றும் பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் க்ளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT