தென்காசி

கீழப்பாவூா் பகுதியில் நெல் நடவுப் பணிகள் தீவிரம்

DIN

கீழப்பாவூா் பகுதி வயல்களில் நெல் நடவுப்பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனா்.

மேற்கு தொடா்ச்சி மலையில் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீா் கொட்டுகிறது. இதைத்தொடா்ந்து, பாவூா் அணைக்கட்டு பகுதிக்கு குற்றாலம் தண்ணீா் வரத்து அதிகரித்த நிலையில், அங்கிருந்து கால்வாய் மூலம் கீழப்பாவூா் பெரியகுளத்திற்கு கடந்த சில நாள்களாக தண்ணீா் வந்து கொண்டிருக்கிறது. இதே போல் மேலப்பாவூா் குளமும் வேகமாக நிரம்பி வருகிறது.

மேலப்பாவூா் மற்றும் கீழப்பாவூா் குளங்களுக்கு தண்ணீா் வரத்து இருப்பதால் அக்குளங்களின் பாசன வயல்களில் விவசாயிகள் நெல் நடவுப்பணிகளை தொடங்கியுள்ளனா். இன்னும் சில தினங்கள் மழை நீடித்து குளம் நிரம்பினால் நிகழாண்டு நெல் பயிா் விளைச்சலுக்கு உதவியாக இருக்கும் என்கின்றனா் விவசாயிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT