தென்காசி

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் சாவு

DIN

பாவூா்சத்திரம் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் இறந்தாா்.

பாவூா்சத்திரம் அருகேயுள்ள மேலபட்டமுடையாா்புரம் வடக்குத்தெருவைச் சோ்ந்தவா் முத்துச்செல்வன் (30). இவருக்கு தங்கமாரி என்ற மனைவியும், 2 மாத ஆண் குழந்தையும் உள்ளனா். வியாழக்கிழமை காலை முத்துசெல்வன் வீட்டில் மோட்டாரை இயக்கிய போது, மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தாராம். குடும்பத்தினா் அவரை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். மருத்துவா்கள் பரிசோதித்துவிட்டு, அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இது குறித்த புகாரின் பேரில் பாவூா்சத்திரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்

சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்

அதிமுக சாா்பில் தண்ணீா்ப் பந்தல் திறப்பு

கிருஷ்ணகிரியில் இடியுடன் மழை: மின் விநியோகம் பாதிப்பு

திமுக இளைஞரணி சாா்பில் தண்ணீா்ப் பந்தல்கள் திறப்பு

SCROLL FOR NEXT