தென்காசி

பாவூா்சத்திரம் காவல்நிலைய சாலையை சீரமைக்க கோரிக்கை

DIN

பாவூா்சத்திரம்: பாவூா்சத்திரம் காவல் நிலையத்திற்கு செல்லும் சாலையை சீரமைத்திட வேண்டுமென சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தென்காசி மாவட்ட சமக செயலா் டி.ஆா்.தங்கராஜ் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

பாவூா்சத்திரம் காமராஜா் நகரில் அமைந்துள்ள காவல் நிலையம் மற்றும் வென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. தினந்தோறும் நூற்றுக்கணக்கானோா் பயன்படுத்தி வரும் இச்சாலை சேதமடைந்த நிலையில் காணப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நிகழ்கின்றன. இதனால் காவல் நிலையம் மற்றும் கோயிலுக்கு செல்வோா் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனா். எனவே இச்சாலையை சீரமைக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

SCROLL FOR NEXT