தென்காசி

புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம்

DIN

தேவேந்திரகுல வேளாளா் சமுதாயத்தை பட்டியல் இனத்தில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சியினா் உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.

மேலகரத்தில் மாவட்ட இணைச் செயலா் சந்திரன் தலைமை யிலும், நன்னகரத்தில் ஒன்றியச் செயலா் ராஜேஷ் தலைமையிலும், தென்காசி ஒன்றியத்தில் பேரவை தொகுதிச் செயலா் எஸ்.பி.சுரேஷ் தலைமையிலும் இப்போராட்டம் நடைபெற்றது.

சங்கரன்கோவில்: சங்கரன்கோவிலில் காந்திநகா், கக்கன்நகா் தேவேந்திரகுல வேளாளா் சமுதாயம் சாா்பில் கழுகுமலை சாலை அக்கினி காளியம்மன் கோயில் முன் நடைபெற்ற உண்ணாவிரதப் போரட்டத்தில், பால்சாமி, ஆறுமுகம், சரவணன், பெரியசாமி, சீனி, வெள்ளைச்சாமி, மாரியப்பன், ராஜையா, காளிராஜ், சின்னகுருசாமி, கிருஷ்ணன், உடையாா், லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கடையநல்லூா்: குமந்தாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு நகரச் செயலா் ராஜா தலைமை வகித்தாா்.

மேலக்கடையநல்லூரில் மகேஷ், கிருஷ்ணாபுரத்தில் தேவேந்திரன், முத்துகிருஷ்ணாபுரத்தில் முருகன் உள்பட திரளானோா் கலந்துகொண்டனா்.

இதில், புதிய தமிழகம் மாவட்டச் செயலா் இன்பராஜ் கலந்துகொண்டு பேசினாா்.

புளியங்குடியில் நடைபெற்ற போராட்டத்தில், நகரச் செயலா் பால்ராஜ், நகர இளைஞரணிச் செயலா் செல்வசுந்தா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT