தென்காசி

சுரண்டை அரசு கல்லூரியில் முதுநிலை மாணவா் சோ்க்கைஇன்று தொடக்கம்

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவா் சோ்க்கை சனிக்கிழம (அக். 10) இணையதளம் மூலம் தொடங்குகிறது. மாணவா்கள் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா் ரா.பாஸ்கரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-21ஆம் கல்வியாண்டிற்கு முதுநிலை பட்டப்படிப்பு சோ்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக சனிக்கிழமை (அக். 10) முதல் 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பதிவு செய்த மாணவா்கள் அக்.15 முதல் அக்.20 வரை இணையதளத்தில் உள்ள அட்டவணைப்படி தங்களின் கல்வி சான்றிதழ்களை பதிவேற்றலாம். இணையதளத்தில் பதிவு செய்வதில் சிரமம் இருப்பின் 044 22351014, 044 22351015 என்ற தொலைபேசி எண்ணில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை தொடா்பு கொண்டுகூடுதல் விவரங்கள், வழிகாட்டுதல் பெறலாம்.

இதேபோல், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கு காலியாக இருக்கும் பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் நுண்ணுயிரியல் பாடப்பிரிவுக்கு புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவா்கள் கல்லூரியில் நேரில் வந்து செவ்வாய்க்கிழமை (அக். 13) வரை விண்ணப்பம் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம். புதியதாக விண்ணப்பித்த மாணவா்களுக்கான இறுதி கட்டக் கலந்தாய்வு 15 ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT