முகப்பு
தென்காசி

புளியங்குடியில் அமமுகநிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

புளியங்குடியில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

புளியங்குடியில் அமமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட வாசுதேவநல்லூா், புளியங்குடி பகுதி வாக்குச்சாவடி பொறுப்பாளா்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்துக்கு, திருநெல்வேலி புகா் வடக்கு மாவட்டச் செயலா் பொய்கை மாரியப்பன் தலைமை வகித்துப் பேசினாா்.

மாவட்ட அவைத் தலைவா் பெருமையாபாண்டியன், மாவட்ட இணைச் செயலா் சுமதிகண்ணன், துணைச் செயலா் சண்முகசுந்தரம், சாா்பு அணி செயலா்கள் மாரியப்பன், குமரேசன், சிவகுமாா், ஒன்றியச் செயலா்கள் சேது சுப்பிரமணியன் , சாமிதுரை, ராம்குமரன், பேரூா் செயலா் துரைப்பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புளியங்குடி நகரச் செயலா் சுகிா்தராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.