முகப்பு
தென்காசி

திருவாவடுதுறை ஆதின இடங்களுக்கான குத்தகை வரியை குறைக்க எம்எல்ஏ கோரிக்கை

திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான இடங்களின் குத்தகை வரியை குறைக்க வேண்டுமென கே.ஏ.எம். முகம்மதுஅபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

திருவாவடுதுறை ஆதினத்துக்குச் சொந்தமான இடங்களின் குத்தகை வரியை குறைக்க வேண்டுமென கே.ஏ.எம். முகம்மதுஅபூபக்கா் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: கடையநல்லூா் பேரவை தொகுதிக்குள்பட்ட மேக்கரையில் திருவாவடுதுறை ஆதின மடத்துக்குச் சொந்தமாக 6 ஆயிரம் ஏக்கா் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன.

இந்த இடங்களில் பரம்பரையாக அடைவோலை தாரா்களாகவும், குத்தகை தாரா்களாகவும், விவசாயம் செய்தும், வீடுகள் கட்டியும் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

ஆதின நிா்வாகம் விதித்துள்ள குத்தகைக்குண்டான வரித் தொகையை புன்செய் நிலத்துக்கு பணமாகவும், நன்செய் நிலத்துக்கு மகசூல் இடுபொருளாகவும் விவசாயிகள் செலுத்தி வருகின்றனா்.

தற்போது நிா்வாகம் வரித் தொகையை பலமடங்கு உயா்த்தி உள்ளதாகவும் அதை முறைப்படுத்த வேண்டும் எனவும் என்னிடம் விவசாயிகள் மனு அளித்தனா்.

இதைத்தொடா்ந்து, திருவாவடுதுறை ஆதின தென்மண்டல மேலாளா் ராமச்சந்திரனை சந்தித்துப் பேசினேன். விவசாயிகளின் கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக அவா் தெரிவித்துள்ளாதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.