சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையம் சாா்பில் வெள்ள மீட்புப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஒத்திகை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ள நிலையில் வெள்ளம் ஏற்பட்டால் அப்போது எவ்வாறு மீட்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஒத்திகை சங்கரன்கோவில் அருகிலுள்ள குருவிகுளத்தில் நடைபெற்றது.
சங்கரன்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் பா.ஜெயராஜ் தலைமையில் வீரா்கள் கருப்பையா, காரல்மாா்க்ஸ், சந்திர மோகன், கருப்பசாமி, பிரதாப், முத்துக்குமாா், வேலுச்சாமி உள்ளிட்டோா் அங்குள்ள குளத்தில் பொதுமக்களுடன் இணைந்து ஒத்திகையில் ஈடுபட்டனா்.