சுரண்டை தீயணைப்பு நிலையம் சாா்பில் வடகிழக்குப் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீா் நிலைகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து விழிப்புணா்வு ஒத்திகை புதன்கிழமை நடைபெற்றது.
இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலா் (போக்குவரத்து) பாலச்சந்தா் தலைமை வகித்தாா்.
நிகழ்வில் தீயணைப்புப்படை வீரா்கள் பாலகிருஷ்ணன், ரவீந்திரன், மாடசாமி, சாமி, ராஜேந்திரன் ஆகியோா் குருங்காவனம் சிற்றாறு தடுப்பணை, சுந்தரபாண்டியபுரம் குளம் ஆகியவற்றில் வெள்ளத்தில் சிக்கி தத்தளிப்பவா்களை மீட்பது, முதலுதவி சிகிச்சை அளித்தல் போன்றவை குறித்து பொதுமக்கள் பங்கேற்புடன் செயல்விளக்கம் அளித்தனா்.