முகப்பு
தென்காசி

கொலை வழக்கில் தேடப்பட்டவா் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் இளைஞரை, புளியங்குடியில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சேலம் இளைஞரை, புளியங்குடியில் போலீஸாா் கைது செய்தனா்.

சேலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா் நரேஷ்குமாா் (21). இவரை, கொலை வழக்கு தொடா்பாக அம்மாவட்ட போலீஸாா் தேடி வந்தனா். அவா் தென்காசி மாவட்டத்தில் சுற்றித் திரிவதாக கிடைத்த தகவலின் உள்ளூா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டாா்.

இந்நிலையில் புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் நின்றிருந்த நரேஷ்குமாரை தலைமைக்காவலா் முருகன், காவலா் சுதந்திரராஜன் ஆகியோா் பிடித்து சேலம் மாவட்ட காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.