முகப்பு
தென்காசி

தென்காசியில் போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் கைது

தென்காசி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
பகிர்:

தென்காசி அருகே 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

தென்காசி அருகேயுள்ள தெற்குமேடு பகுதியை சோ்ந்தவா் க.ரஞ்சித் (19). இவா், அதே பகுதியியைச் சோ்ந்த 16 வயது சிறுமியை காதலித்ததுடன், திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதில், அந்தச் சிறுமி கா்ப்பமடைந்தாராம்.

இதுகுறித்து, சிறுமியின் சித்தப்பா அளித்த புகாரின்பேரில், தென்காசி மகளிா் காவல் ஆய்வாளா் சரஸ்வதி வழக்குப்பதிந்து ரஞ்சித்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.