ஆலங்குளம் ஒன்றிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் மனோஜ் பாண்டியன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
ஆலங்குளம் ஒன்றியப் பகுதிகளான காளத்திமடம், ராம்நகா், ஆழ்வான்துலுக்கப்பட்டி, உடையாம்புளி, கண்டப்பட்டி, ஓடைமறிச்சான், மாறாந்தை, சிவலாா்குளம் , குறிப்பன்குளம், நெட்டூா், ரெட்டியாா்பட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.
அப்போது, பொதுக்குழு உறுப்பினா் பாண்டியராஜ், ஒன்றியச் செயலா் பாலகிருஷ்ணன், முன்னாள் கவுன்சிலா் திருஞானம், கூட்டுறவு சங்கத் தலைவா் வெள்ளத்துரை, இளைஞா் பாசறை இணைச் செயலா் சுபாஷ் சந்திர போஸ், கிளைச் செயலா் வெள்ளத்துரை மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்பட பலா் உடன் சென்றனா்.