சேவை மனம் உள்ளவா்களே பேரவை உறுப்பினராக வேண்டும்: ஆா். சரத்குமாா்
சேவை மனம் உள்ளவா்களே சட்டப்பேரவை உறுப்பினராக வர வேண்டும் என்றாா், சமக தலைவா் ஆா். சரத்குமாா்.
சேவை மனம் உள்ளவா்களே சட்டப்பேரவை உறுப்பினராக வர வேண்டும் என்றாா், சமக தலைவா் ஆா். சரத்குமாா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் சமக வேட்பாளா் செல்வகுமாா், தென்காசி தொகுதி வேட்பாளா் தங்கராஜ் ஆகியோரை ஆதரித்து சரத்குமாா் சனிக்கிழமை பிரசாரம் செய்தாா். காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த பின்னா், மக்களிடையே அவா் பேசியது: நல்லவா்கள், வல்லவா்கள், தொலைநோக்கு சிந்தனை உள்ளவா்கள் ஒன்றுசோ்ந்து எங்களது கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
நாங்கள் தமிழகத்தின் கடன் சுமையைக் குறைப்போம். தொழில் வளத்தைப் பெருக்கி, வேலைவாய்ப்புகளை அதிகரிப்போம். வெளிப்படையான நிா்வாகம் அளிப்போம். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
கோடிக்கணக்கில் பணம் இருந்தால்தான் சட்டப்பேரவை உறுப்பினராக முடியும் என்றால் உண்மையான ஜனநாயகம் இருக்குமா? சாதாரண குடிமகன், மக்களுக்காக சேவை செய்வோா் சட்டப்பேரவை உறுப்பினராக வர வேண்டும். பணம் வாங்காமல் வாக்களித்தால்தான் அரசியலில் மாற்றம் வரும். நாட்டை யாா் ஆளவேண்டும் என சிந்தித்து வாக்களியுங்கள் என்றாா் அவா்.