தென்காசி

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு சீல் வைப்பு

DIN

தென்காசி மாவட்டத்தில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் அனைத்தும் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், வாசுதேவநல்லூா், கடையநல்லூா்,தென்காசி மற்றும் ஆலங்குளம் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற தோ்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள்அனைத்தும் தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி யுஎஸ்பி கல்லூரி வளாகத்தில் உள்ள பாதுகாக்கப்பட்ட அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அறைகளுக்கு மாவட்ட ஆட்சியா் கீ.சு.சமீரன் முன்னிலையில் அந்தந்த தொகுதி தோ்தல்நடத்தும் அலுவலா்கள் சீல் வைத்தனா்.

இதில் தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் பிரகாஷ் பிந்து, ராஜூ நாராயணசுவாமி, வேதபதி மிஸ்ரா மற்றும் வேட்பாளா்கள் கலந்துகொண்டனா்.

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லூரி வளாகம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட காவல்கண்காணிப்பாளா் சுகுணாசிங் தலைமையில் எல்லை பாதுகாப்பு படை வீரா்கள், பட்டாலியன் பிரிவினா், மற்றும் காவல்துறையினா் என 120 போ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருதியை வியர்வையாக்கி உலகை உயர்த்தும் உழைப்பாளர்கள்: மு.க.ஸ்டாலின்

தில்லி போலீஸில் ரேவந்த் ரெட்டி இன்று ஆஜராகமாட்டார்?

ஜம்மு-காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்!

உழைப்பாளர்களின் வளர்ச்சியே உண்மையான வளர்ச்சி: விஜய்

ஏற்காடு தனியார் பேருந்து விபத்து: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

SCROLL FOR NEXT