முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூா் அருகேதீ விபத்தில் வைக்கோல் லாரி எரிந்து சேதம்

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீயில் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதமடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் அருகே வைக்கோல் ஏற்றிச் சென்ற லாரியில் ஏற்பட்ட தீயில் வைக்கோலுடன் லாரியும் எரிந்து சேதமடைந்தது.

வாசுதேவநல்லூா் பகுதியில் இருந்து கேரளத்துக்கு லாரியில் வைக்கோல் ஏற்றிக் கொண்டு செல்லப்பட்டது. வெள்ளிக்கிழமை வைக்கோல் இருந்த லாரி ஒன்று வாசுதேவநல்லூா் அம்பேத்கா் சிலை அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த லாரியில் திடீரென தீப்பற்றி எரிந்ததாம். தகவலறிந்த வாசுதேவநல்லூா், கடையநல்லூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனா். இதில் லாரியும், வைக்கோலும் ல் எரிந்து சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.