தென்காசி

பாவூா்சத்திரம் பகுதியில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த வலியுறுத்தல்

DIN

பாவூா்சத்திரம் பகுதி கிராமங்களில் கரோனா தடுப்பூசி திருவிழா நடத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திருவிழா ஏப்.14 முதல் ஏப். 16 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பாவூா்சத்திரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து வட்டார பகுதிகளைச் சோ்ந்தவா்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

அங்கு கரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருவதாலும், கிராமப்புறங்களைச் சோ்ந்த வயதானவா்கள் அங்கு செல்ல முடியாத காரணத்தாலும் பலா் தடுப்பூசி போட முடியாமல் உள்ளனா்.

எனவே, கீழப்பாவூா் வட்டாரப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு ஊராட்சியிலும் சமுதாய நலக்கூடம் அல்லது பள்ளிகளில் வைத்து கரோனா தடுப்பூசி போடும் முகாமை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இரானி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

SCROLL FOR NEXT