பாவூா்சத்திரம் அருகே உள்ள கீழப்பாவூா் நரசிம்மா் கோயிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது.
வழக்கமாக நடைபெறும் தீா்த்தவலம் வருதல் நிகழ்வு ரத்து செய்யப்பட்டு, பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டது.
கரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் கோயிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்து விட்டு சென்றனா்.