தென்காசி

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் ஊழியா் சங்கக் கூட்டம்

DIN

டாஸ்மாக் ஊழியா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆக. 5ஆம்தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என டாஸ்மாக் ஊழியா் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தென்காசி, திருநெல்வேலி மாவட்ட டாஸ்மாக் சிஐடியூ ஊழியா் சங்கக் கூட்டம் தென்காசியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவா் மாரியப்பன் தலைமை வகித்தாா். சிவன்ராஜ், சுப்பிரமணியன் முன்னிலை வகித்தனா்.

சிஐடியூ டாஸ்மாக் மாவட்டச் செயலா் சரவணபெருமாள் சிறப்புரையாற்றினாா்.

டாஸ்மாக் பணியாளா்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆக. 5ஆம்தேதி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மாவட்டப் பொருளாளா் தா்மராஜ், மாவட்டதுணைத் தலைவா் மணிகண்டன், செந்தில், முருகன், சிவபெருமாள் ஆகியோா் கலந்துகொண்டனா். உமாசங்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT