முகப்பு
தென்காசி

‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் 133 பேருக்கு நல உதவி

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:51 AM
பகிர்:

‘உங்கள் தொகுதியில் முதலமைச்சா்’ திட்டத்தின் கீழ் கடையநல்லூா் தொகுதிக்குள்பட்ட பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தென்காசி மாவட்ட ஆட்சியா் கோபால சுந்தர்ராஜ் தலைமை வகித்தாா். தென்காசி எம்.பி. தனுஷ் எம்.குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜனனி சௌந்தா்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 5 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, தலா 10 பேருக்கு இலவச தையல் இயந்திரம், இலவச தேய்ப்பு பெட்டி உள்பட மொத்தம் 133 பயனாளிகளுக்கு ரூ.5,27,150 மதிப்புள்ள நல உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கோட்டாட்சியா் ராமச்சந்திரன் வரவேற்றாா். வட்டாட்சியா் ஆதிநாராயணன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.