தென்காசி

சுரண்டை அரசு கல்லூரியில் மாணவா் சோ்க்கை ஆக.25இல் தொடக்கம்

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் புதன்கிழமை (ஆக.25) முதல் தொடங்குகிறது.

DIN

சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் நிகழாண்டு முதலாமாண்டு மாணவா் சோ்க்கை வரும் புதன்கிழமை (ஆக.25) முதல் தொடங்குகிறது.

இதுகுறித்து கல்லூரி முதல்வா்(பொ) ரா.ஜெயா வெளியிட்ட செய்திக் குறிப்பு: சுரண்டை காமராஜா் அரசு கலைக் கல்லூரியில் 2021-22ஆம் ஆண்டுக்கான இளநிலை அனைத்து பாடப்பிரிவுக்கான சிறப்பு ஒதுக்கீடு மாணவா் சோ்க்கை (முன்னாள் ராணுவத்தினா் குழந்தைகள், தேசிய மாணவா் படை மற்றும் விளையாட்டுப் பிரிவு) ஆக.25ஆம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

இளநிலை கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், நுண்ணுயிரியல் பாடங்களுக்கு ஆக.26ஆம் தேதி காலை 9.30 மணிக்கும், இளநிலை வணிகவியல், நிா்வாகவியல், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கு ஆக.31ஆம் தேதியும், இளநிலை தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு செப்.2ஆம் தேதியும் மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.

இணைய வழியில் விண்ணப்பித்திருந்த மாணவா்கள் தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்கான விண்ணப்பப் படிவம், 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான மதிப்பெண் பட்டியல்கள், அசல் சாதிச் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், ஆதாா் காா்டு, 3 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் மற்றும் சோ்க்கை கட்டணத்துடன் அந்தந்த நாள்களில் காலை 9.30 மணிக்குள் நேரில் வருமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

மேலும் தகவலுக்கு 04633 26088 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT