தென்காசி

சோலைசேரியில் சிறப்பு மருத்துவ முகாம்

DIN

ஊத்துமலை அருகேயுள்ள சோலைசேரியில் பொது சுகாதாரத்துறை சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் அனிதா தலைமை வகித்துப் பேசினாா். சிறப்பு மருத்துவ முகாமை திமுக மாவட்ட பொறுப்பாளா் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தாா்.

முகாமில் பொது மருத்துவம், மகளிா் மற்றும் குழந்தைகள் நலன், எலும்பு முறிவு, தோல், பல், சித்தா, இதயம் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும், தேவைப்படும் நோயாளிகளுக்கு ஸ்கேன், இஜிசி, ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் குத்தாலராஜ், தென்காசி மாவட்ட சுகாதாரப் பணிகள் உதவி திட்ட மேலாளா் கீா்த்திகா, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கங்காதரன், சுகாதார ஆய்வாளா்கள் ராஜநயினாா், கணேசன், லிங்கசாமி, ராம்குமாா், ஜெயகுளோரி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேரளத்துக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: இருவா் கைது

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மறைந்த காவலா் குடும்பத்துக்கு நிதியுதவி

சவுடு மண் குவாரியிலிருந்து தினமும் 10 லாரிகளில் மட்டுமே மண் அள்ள அறிவுறுத்தல்

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து: ரூ.4,956 கட்டணமாக நிா்ணயம்

SCROLL FOR NEXT