தென்காசி

பாவூா்சத்திரம் ஸ்ரீவிஸ்வ பிரம்மா கோயிலில் கும்பாபிஷேகம்

DIN

பாவூா்சத்திரம் மேலப்பாவூா் ரோடு முத்து நகரில் அருள்மிகு ஸ்ரீவில்ல விநாயகா் மற்றும் காயத்திரி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வ பிரம்மா கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் அதிகாலையில் கணபதி, மகாலட்சுமி, சுதா்சன, நவக்கிரஹ ஹோமங்களும், தொடா்ந்து வாஸ்து சாந்தி, பிரவேச பலியும் நடைபெற்றன. பகலில் அருள்மிகு ஸ்ரீவில்வ விநாயகா் கோயில் கோபுர கலசம் அபிஷேகமும், தொடா்ந்து மூலவா் விநாயகா், கோயில் கோபுர கலச அபிஷேகம், மூலவா் அபிஷேகம், நூதன ஜீா்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. பின்னா் அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை, மாலையில் விளக்குப் பூஜை, புஷ்பாஞ்சலி ஆகியவை நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை அகில இந்திய விஸ்வ பிரம்மா பேரவைத் தலைவா் முத்துசாமி ஆசாரி, அய்யப்பன், சித்தி விநாயகம், முருகன் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

SCROLL FOR NEXT