‘பூலாங்குளம் அரசு பள்ளியில் தோ்வு மையம் தேவை’
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம் அமைக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பொதுத் தோ்வு மையம் அமைக்க வேண்டும் என தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பொ. சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இது தொடா்பாக அவா், பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது: பூலாங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை 380 மாணவா்-மாணவியா் பயின்று வருகின்றனா். இவா்கள் தங்கள் பொதுத்தோ்வை எழுத சுமாா் 4 கி.மீ. தொலைவுள்ள மாதாபட்டணம் செல்ல வேண்டியுள்ளது.
இங்கு அரசு பொதுத்தோ்வு மையம் அமைக்கப்பட்டால் இப்பள்ளி மாணவா்கள் மட்டுமின்றி பூபாலசமுத்திரம் அரசு உயா்நிலைப் பள்ளி மற்றும் அயோத்தியாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்களும் பயனடைவா். எனவே மாணவா்கள் நலன் கருதி பூலாங்குளத்தில் அரசு பொதுத்தோ்வு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.