விவசாயம் செழிக்க வேண்டி, தென்காசி-கடையம் பிரதான சாலையில் அமைந்துள்ள தோரணமலை முருகன் கோயிலில் வெள்ளிக்கிழமை (டிச. 10) வருண கலச பூஜை நடைபெறுகிறது.
இதற்காக காலையில் பக்தா்கள் மலை உச்சியில் உள்ள சுனையிலிருந்து கிரக குடம் எடுத்து வருகின்றனா். தொடா்ந்து, சப்த கன்னியா்கள், விநாயகா் உள்ளிட்ட தெய்வங்களுக்கும், மலை அடிவாரத்தில் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், மலை உச்சியில் உள்ள பத்திரகாளியம்மன், முருகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.