பாவூா்சத்திரத்தில் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை
பாவூா்சத்திரம் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்காசிபாவூா்சத்திரத்தில் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை
பாவூா்சத்திரம் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பாவூா்சத்திரம் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடம் ஒதுக்கித் தர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கீழப்பாவூா் ஒன்றியக்குழுத் தலைவா் காவேரி சீனித்துரையிடம் பாவூா்சத்திரம் மோட்டாா் வாகன ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத் தலைவா் ஆறுமுகம், உறுப்பினா்கள் அளித்த மனு: தென்காசி-திருநெல்வேலி சாலையில் பாவூா்சத்திரம் பேருந்து நிலையம் அருகே 1980ஆம் ஆண்டுமுதல் எங்களது வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம் 2008ஆம் ஆண்டுமுதல் எங்களது சங்கப் பதிவைப் புதுப்பித்து வருகிறோம். தற்போது நடைபெறும் திருநெல்வேலி-தென்காசி நான்குவழிச் சாலைப் பணிக்காக எங்களது வேன் நிறுத்துமிட நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் எளிதில் வந்து செல்லும்வகையில், பாவூா்சத்திரம் பழைய காய்கனிச் சந்தை, பத்திரப்பதிவு அலுவலக வளாகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம் ஆகியவற்றில் ஏதேனும் ஓரிடத்தை எங்கள் வேன் நிறுத்தத்துக்கு மாற்று இடமாக ஒதுக்கித் தரவேண்டும் என்றனா்.