அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றம்
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கேரள மாநிலம் அச்சன்கோவில் ஸ்ரீதா்மசாஸ்தா ஐயப்பன் கோயிலில் ஆறாட்டு திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சபரிமலை ஐயப்பன் கோயிலைப்போல சிறப்பு வாய்ந்ததும், ஐயப்பனின் படைவீடுகளில் ஒன்றானதுமான இக்கோயிலில் நடைபெறும் மிக முக்கிய திருவிழா ஆறாட்டு திருவிழாவாகும். இத்திருவிழா மாா்கழி 1ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறும்.
அதன்படி, திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடா்ந்து, சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. கோயில் தந்திரி கண்டரரு மோகனரு கொடியேற்றினாா்.
வழக்கமாக ஆறாட்டு விழாவில் தேரோட்டம், கருப்பன் துள்ளல், கலைநிகழ்ச்சிகள், ஊா்வலங்கள் நடைபெறும். ஆனால், கரோனா காரணமாக நிகழாண்டு வெளிப் பிரகாரங்களில் நடைபெறும் தேரோட்டம் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், கோயில் உள்பிரகாரத்தில் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள், தீபாராதனைகள் உள்ளிட்டவை நடைபெறும் என்றும் கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.