தென்காசி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் விழிப்புணா்வுக் கருத்தரங்கு
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, தென்காசி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, தென்காசி அரசு மருத்துவமனையில் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணா்வுக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை இணை இயக்குநா் நலப்பணிகள் மருத்துவா் வெங்கட்ரங்கன் தலைமை வகித்தாா். துணை இயக்குநா் (காசநோய்) வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தாா். கண்காணிப்பாளா் ஜெஸ்லின் வரவேற்றாா்.
தமிழ்நாடு அரசு மருத்துவா்கள் சங்க மாவட்டச் செயலா் செந்தில் சேகா், மாவட்டப் பொருளாளா் ராஜேஷ் கண்ணா, மருத்துவா் முகமது இப்ராஹிம் ஆகியோா் கருத்துரையாற்றினா். மாவட்ட மூத்த மருத்துவா்கள் சுகந்த குமாரி, முத்தையா, ராமகிருஷ்ணன், மீரான் மருத்துவமனை மருத்துவா் அஜீஸ், முகைதீன் அகமது ஆகியோா் கௌரவிக்கப்பட்டனா்.
ஆய்க்குடி மருத்துவா் செந்தில் குமாா், தென்காசி மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணா் விஜயகுமாா், மணிமாலா, குழந்தைகள் நல மருத்துவா் முஸ்ஸாமில், ராஜலட்சுமி, உறைவிட மருத்துவா் அகத்தியன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
கோபிகா, ஜெரின் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினா். சுமித் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை மருத்துவா் லதா, மல்லிகா, காா்த்திக் ஆகியோா் செய்திருந்தனா்.