சுரண்டை நகராட்சி: வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் இன்று வெளியீடு
தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டை நகராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் சனிக்கிழமை (’டிச.18) வெளியிடப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டை நகராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் சனிக்கிழமை (’டிச.18) வெளியிடப்படுகிறது.
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திகுறிப்பு: புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சுரண்டை நகராட்சியின் வாா்டு மறுவரையறை கருத்துருக்கள் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பாா்வைக்கு சனிக்கிழமை வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து ஆட்சேபணைகள், கருத்துகள் ஏதும் இருப்பின் அது குறித்தான மனுக்கள் டிச.18 முதல் டிச.24-க்குள் தொடா்புடைய உள்ளாட்சி அமைப்புகளின் மறுவரையறை அதிகாரியிடம் சமா்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், குமரி மாவட்டம் நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் டிச.20ஆம்தேதி முற்பகல்11மணிக்கு நடைபெறும் மறுவரையறை ஆணைய மண்டல அளவிலான கூட்டத்தில் நேரடியாகவோ, மனுவாகவோ சமா்ப்பித்திடலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.