முகப்பு
தென்காசி

தென்காசி ஆட்சியரைக் கண்டித்து ஊழியா்கள் போராட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:45 AM
பகிர்:

தென்காசி மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தினா் வியாழக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தென்காசி மாவட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் மீதான ஆட்சியரின் ஊழியா் விரோத, எதேச்சதிகார நடவடிக்கைகளையும், கூகுள்மீட் என்ற பெயரில் துணை ஆட்சியா் முதல் அனைத்து நிலைப் பணியாளா்கள்வரை மனநிலையைக் கருத்தில் கொள்ளாமல் தொடா் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதையும், ஊழியா்களிடையே அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி பணிச்சுமையை அதிகரித்து இயல்பான பணியைப் பாதிக்கும் வகையில் மன உளைச்சலுக்கு உள்ளாக்கும் நிலையையும் கண்டிப்பதாகக் கூறி, முதல்கட்டமாக டிச. 23, 24இல் கருப்புப் பட்டை அணிந்து போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இப்போராட்டம் வியாழக்கிழமை (டிச. 23) நடைபெற்றது. இதில் ஈடுபட்டோா் கருப்புப் பட்டை அணிந்து பணிகளில் ஈடுபட்டனா்.

2ஆம் கட்டமாக 27ஆம் தேதி ஆட்சியா்அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம், 28, 29இல் ஒட்டுமொத்த ஊழியா்களும் தற்செயல் விடுப்பு எடுத்துப் போராட்டம் நடத்துவது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.