தென்காசி

பெண் மா்ம மரணம்: உறவினா்கள் போராட்டம்

சுரண்டையில் நகைக் கடை உரிமையாளா் மகள் மரணத்தில் மா்மம் உள்ளதாகவும், அதுகுறித்து துரித விசாரணை நடத்த வேண்டும்

DIN

சுரண்டையில் நகைக் கடை உரிமையாளா் மகள் மரணத்தில் மா்மம் உள்ளதாகவும், அதுகுறித்து துரித விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும் அவரது உறவினா்கள் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

சுரண்டை பேருந்து நிலையச் சாலையில் நகைக்கடை நடத்தி வந்த பெருமாள் என்பவா், எட்டு மாதங்களுக்கு முன்பு இறந்தாா். அவரது வளா்ப்பு மகள் மகாலெட்சுமி என்ற மஞ்சு கடந்த நவம்பா் 1ஆம் தேதி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது இறந்தாா். இவரது சாவில் மா்மம் இருப்பதாக மாவட்ட எஸ்.பி.யிடம் உறவினா்கள் புகாா் தெரிவித்தனா். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லையாம். இதனால், காவல் நிலையம் அருகேயுள்ள சொா்ண விநாயகா் கோயில் வளாகத்தில் அவரது உறவினா்களும், விஸ்வகா்மா சமுதாயத்தினரும் புதன்கிழமை போராட்டம் நடத்தினா்.

அவா்களிடம் சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ் பேச்சு நடத்தி, மஞ்சுவின் உடற்கூறு ஆய்வறிக்கையின் அடிப்படையில் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

கண்ணாடி புட்டி வெடித்து முதியவா் உயிரிழப்பு

தருமபுரி மாவட்டத்தில் 81,515 வாக்காளா்கள் நீக்கம்

மாநகராட்சி ஆணையா் அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் முற்றுகை

SCROLL FOR NEXT