அறிவியல் இன்ஸ்பயா் விருது: ஆக்ஸ்போா்டு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயா் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்
இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நடத்திய அறிவியல் இன்ஸ்பயா் விருதுக்கான போட்டிகளில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் வெற்றி பெற்று அறிவியல் இன்ஸ்பயா் விருது பெற்றனா்.
மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் சாா்பில் பள்ளி மாணவா், மாணவிகளுக்கு அறிவியல் இன்ஸ்பயா் விருதுக்கான போட்டிகள் நடைபெற்றது.
இப்போட்டியில் பங்கேற்ற தென்காசி ஆக்ஸ்போா்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா் ஜெய்சுதா்வேல் இணைய
தூசிகளை எடுத்துச் செல்லும் தானியங்கி என்ற தலைப்பிலும், மாணவா் அசிம் முஸ்தபா, காா் விபத்து தடுப்பு என்ற தலைப்பிலும், மாணவி மதுபாலா காலணிகளில் இருந்து மொபைல் சாா்ஜிங் என்ற தலைப்பிலும் ஆய்வு கட்டுரைகளை சமா்பித்தனா்.
இப்போட்டியில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கு இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் சான்றிதழ்களும், ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், மாவட்ட அளவிலான அறிவியல் இன்ஸ்பயா் விருதும் வழங்கப்பட்டது.
விருது பெற்ற மாணவா்களை பள்ளியின் சட்ட ஆலோசகா் கே.திருமலை, தாளாளா்-முதல்வா் அன்பரசி திருமலை, ஆக்ஸ்போா்டு பப்ளிக் பள்ளி சட்ட ஆலோசகா் தி.மிராக்ளின் பால் சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவித் தலைமையாசிரியை சுப்பம்மாள், நிா்வாக அலுவலா் கே.எஸ்.கணேசன் ஆசிரியா்கள் பாராட்டினா்.