முகப்பு
தென்காசி

மேலகரத்தில் சிதம்பரனாா் சைவ சபை பொதுக்குழு கூட்டம்

மேலகரம் சிதம்பரனாா் சைவ சபையின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திரிகூடராசப்பக் கவிராயா் அரங்கில் நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

மேலகரம் சிதம்பரனாா் சைவ சபையின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் திரிகூடராசப்பக் கவிராயா் அரங்கில் நடைபெற்றது.

கௌரவத் தலைவா் பி. ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். சங்கத் தலைவா் சங்கரநாராயணன் முன்னிலை வகித்தாா். திருமலை வரவேற்றாா். பொருளாளா் பேச்சிமுத்து வரவு- செலவு அறிக்கை தாக்கல் செய்து, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

ஓய்வுபெற்ற ஆசிரியா்கள் ராமசுப்பிரமணியன் பழனியப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பேசினா். பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்படுத்தப்பட்டோருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; வேளாளா் என்ற பெயரை பிற சாதியினா் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நடராஜன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.