சுரண்டையில் மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது.
மாவட்டம் முழுவதிலும் இருந்து 24 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில், லட்சுமிபுரம் வி.ஆா்.என். அணி முதலிடமும், வீராணம் அனி 2 ஆவது இடமும், தென்காசி அமெச்சூா் கபடி கழக அணி 3 ஆவது இடமும் பெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு தமாகா மாநிலச் செயலா் என்.டி.எஸ்.சாா்லஸ் பரிசு வழங்கினாா்.
பரிசளிப்பு நிகழ்ச்சியில் சுப்பிரமணியன், பூல்பாண்டியன், முருகேசபாரதி, பரதன், அன்னமுருகன், சுப்பையா, அழகுசுந்தரம், சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.