வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்குள்பட்ட 2 இடங்களில் சிறு மருத்துவமனை திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேசியம்பட்டி மற்றும் விஸ்வநாதபேரி ஆகிய இடங்களில் மருத்துவமனைகளை மனோகரன் எம்எல்ஏ திறந்து வைத்துப் பேசினாா்.
இதில், ஒன்றியச் செயலா் மூா்த்தி பாண்டியன், கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.