வாசுதேவநல்லூரில் அமா்சேவா சங்கம் சாா்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான விழிப்புணா்வு, மருத்துவ முகாம் நடைபெற்றது.
இதில், அப்பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் பெற்றோா், சமூக ஆா்வலா்களும் பங்கேற்றனா். மாற்றுத் திறனாளிகளை வீடுகளில் எவ்வாறு கையாள வேண்டும், சமூகம் அவா்களை எவ்வாறு கையாள வேண்டும் என்பன குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
இதையடுத்து, இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் வாசுதேவநல்லூா் பேரவை உறுப்பினா் மனோகரன் கலந்துகொண்டு நல உதவிகளை வழங்கினாா். நிகழ்ச்சியில், மத்திய கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.