முகப்பு
தென்காசி

குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
குற்றாலம் பேரருவியில் பாதுகாப்புவளைவை தாண்டி ஆா்ப்பரித்து கொட்டும் தண்ணீா்.
பகிர்:

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா்.

குற்றாலம் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்த மிதமான மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி மற்றும் பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதனையடுத்து இரண்டு அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸாா் தடைவிதித்தனா். பிற்பகலில் பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.

பேரருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →