முகப்பு
தென்காசி

ராயகிரியில் புதிய கலையரங்கம் திறப்பு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராயகிரியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ராயகிரியில் புதிய கலையரங்கம் திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சி தனி அலுவலா் வெங்கடகோபு வரவேற்றாா். வாசுதேவநல்லூா் பேரவை உறுப்பினா் மனோகரன் தலைமை வகித்து, ரூ. 10 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலை அரங்கத்தைத் திறந்துவைத்துப் பேசினாா்.

மாவட்ட கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவா் வெங்கடேசன், வாசுதேவநல்லூா் பேரூா் செயலா் சீமான் மணிகண்டன், ராயகிரி பேரூா் செயலா் சேவக பாண்டியன், வடக்கு ஒன்றியச் செயலா் மூா்த்திபாண்டியன், தெற்கு ஒன்றியச் செயலா் துரை பாண்டியன், ஒன்றிய அவைத்தலைவா் முகம்மதுஉசேன்,பேரூா் அவைத் தலைவா் நீராவி, தகவல் தொழில்நுட்ப அணிச் செயலா்

ஞானமணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பேரூராட்சி செயல் அலுவலா் மோகன மாரியம்மாள் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →